ஞாயிறு, 18 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-228

என்னவளே
ஒப்பிலா அழகுடன்
உலகை படைத்த இறைவன்
எங்கே இருக்கிறான்?என்றேன்

அடடா
அழகு உலகை ரசித்து
கண்களால் கெளரவப் படுத்து
கடவுளை காணலாம்!என்கிறாய்

செவ்வாய், 13 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-227

என்னவளே
இறந்த பின்னும்
இன்னும் நினைக்கப்படும்
பாரதி பிடிக்குமா?என்றேன்

அடடா
அண்டை மாநிலங்கள்
சண்டை போட்டு கொண்டிருந்தால்
பார் தீ பிடிக்கும்!என்கிறாய்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-31

உன் கண்ணின் மணியாக
என்னை வைத்தாயே!
உன் நெஞ்சுக் கூட்டோடு
என்னை தைத்தாயே!

நான் உனக்கோர் அடையாளம்
உன்னை காக்கும் கடிவாளம்
உந்தன் தொடுகையிலே
உணர்கிறேன் மின்சாரம்

தினந்தோறும் உன்னால் நான் சிறக்கின்றேனே
இறக்கையொன்றும் இல்லாமல் பறக்கின்றேனே!
*
கண்களை கவர்ந்தே இழுக்கும்
வண்ணங்கள் என்னிடம் உண்டு
மலரும் நான் இல்லை
மொழிந்திடு முடிந்தாலே!

அழகாக வானில் பறப்பேன்
அண்ணாந்து பார்த்திட வைப்பேன்
பறவையும் நான் இல்லை
பகர்ந்திடு முடிந்தாலே!

என்மீது காதல் கொண்டோர்
எனக்காக உயிரும் தந்தோர்
எத்தனை பேரென்று
கணக்கே தெரியவில்லை!

என்பேர் என்பேர் என்னென்று நான் சொல்லவா?
*
இருபத்து நான்குக்கும் எனக்கும்
இருக்குதொரு சம்பந்தம் தானே
கடிகாரம் நான் இல்லை
கண்டுபிடி முடிந்தாலே!

சக்கரம் என்னிடம் உண்டு
செல்லாத ஊரே இல்லை
வாகனம் நான் இல்லை
விடை சொல்லு முடிந்தாலே!

என்னாலே கர்வம் கொண்டோர்
பின்னாலே அணி திரண்டோர்
எத்தனை பேரென்று
எண்ணிட முடியாதே!

என்பேர் என்பேர் என்னென்று நான் சொல்லவா?
*
(குறிப்பு:உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது என்ற பாடல் மெட்டு)
எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் பாடலில் கடைசி வரை அது என்ன பேர் என்று சொல்லவேயில்லை!(பாட்டில்)

அந்த கடுப்பிலேயே இந்த பாட்டை எழுதினேன்.நானும் சொல்லவேயில்லை!ஆனா நீங்க கண்டு பிடிச்சிடுவீங்கன்னு தெரியும்!

வியாழன், 8 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-226

என்னவளே
மாப்பிள்ளையை நிமிர்ந்து
நன்றாகப் பார்த்துக் கொள்ளென்று
எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை நீ!

அடடா
நிலைக்கண்ணாடி வழியே
நெடுநேரம் என்னுடன் நீ
கண்களால் பேசியதை யாரறிவார்?

செவ்வாய், 6 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-225

என்னவளே
நட்பின் கூட்டத்தில்
எல்லோரையுமே
சேர்த்துக்கொள்ள ஆசை!

அடடா
சில உறவுகள்
உடைந்த சில்லுகளாய்
ஒட்ட வைக்க என்செய்வேன்?

குறுஞ்செய்திகள்-224


என்னவளே
குழந்தை ஊட்டும் பாலை
எப்படிக் குடிக்கும்?
விலை உயர்ந்த பொம்மை நாய்!

அடடா
கதவுக்கு வெளியே
பசியால் காதடைத்து
ஏக்கமாய் பார்க்கிறது உயிருள்ள நாய்!

திங்கள், 5 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-223

என்னவளே
வரங்கள் தா என்று
தவமிருக்காமலேயே
வரங்கள் தருபவரும் உண்டோ? என்றேன்

அடடா
அத்தகைய கடவுள்கள்
இன்னும் இருக்கிறார்கள்
அவர்கள் பெயர் தாவரங்கள்! என்கிறாய்

சனி, 3 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-222

என்னவளே
ஐம்பதாயிரத்தை இரண்டாக்கி
கணினியும் கழுத்துஅட்டிகையும்
வாங்கி ஐந்து வருடமாகிறது!

அடடா
இன்றைய மதிப்பீடு உண்மைதான்
என் பங்கு பாதி உனது இருமடங்கு
நீ பூட்டியல்லவா வைத்திருக்கிறாய்?

குறுஞ்செய்திகள்-221

என்னவளே
கல்யாணத்துக்கு முன்
கட்டாய எச்.ஐ.வி சோதனை
சந்தேகப்படுவதாகாதா?என்றேன்

அடடா
அது சந்தேகமில்லை
அடுத்த தலைமுறை
மீதான அக்கறை! என்கிறாய்

புதன், 30 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-220

என்னவளே
எத்தனையோ கவிதைகள்
கண்களை மூடி
கேட்டு ரசித்திருக்கிறேன்!

அடடா
இத்தனை சிறிய கவிதையா?
செல்லிட பேசியில்
உன்னுடைய "ம்"...

செவ்வாய், 29 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-219

என்னவளே
பசியால் அழும் குழந்தைக்கு
பால் போட்டு தா என்றால்
முறைக்கிறாள் ஒரு தாய்!

அடடா
அவள் ஐஸ்வர்யா ராய்க்கு
என்ன குழந்தையென்று
வலையில் தேடிக்கொண்டிருக்கிறாள்!

குறுஞ்செய்திகள்-218

என்னவளே
என்னை அடையாளப்படுத்தும்
எத்தனையோ வாய்ப்புகளை
உருவாக்கினார் என் தந்தை!

அடடா
இன்னாரின் மகனென்று
அறிமுகப்படுத்தும் நிலையிலேயே
இப்போது வரைக்கும் நான்!

திங்கள், 28 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-217

என்னவளே
எதிரே இருப்பவர் புன்னகைத்தால்
புன்னகைதானே வர வேண்டும்
இப்படி அழுகை வருகிறதே!

அடடா
புன்னகை முகம் மாறாமல்
தம்பியின் புத்தாண்டு புகைப்படம்
தோற்றம் மறைவை தாங்கியபடி!

சனி, 26 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-216

என்னவளே
சுவாசக் கூட்டின்
ஆர்ப்பரிக்கும் நரம்புகளை
அமைதியாக்குகிறது மருந்து!

அடடா
அளவுக்கு அதிகமானால்
அமுதமே நஞ்சானது போல்
உயிரே அதற்கு விருந்து!

வெள்ளி, 25 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-215

என்னவளே
வாய் திறந்து
பேசினால்
ஓரிரு வார்த்தைகள்!

அடடா
பேசாமல்
மெளனமாகவே
இருந்து விடலாம்!

குறுஞ்செய்திகள்-214

என்னவளே
எல்லா சண்டைகளின்
முடிவுகளிலும்
தேய்ந்து மறைகிறது கோபம்!

அடடா
இப்படி எத்தனையோ முறை
என்ன சொல்லி என்ன?
எப்போதும் போல் ஏற்றுக்கொள்!

புதன், 23 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-213

என்னவளே
எப்படியோ கிடைக்கிறது
இலவசமாகவேணும்
உண்ணுவதற்கான சோறு!

அடடா
எத்தனை நாளைக்கு
எனத்தான் தெரியவில்லை
கரம்பாயிருக்கிறது களம்!

குறுஞ்செய்திகள்-212

என்னவளே
கூட்டில் வசிக்காமல்
அலைந்து திரியும்
குயில் முகம் எதற்கு?

அடடா
கூட்டை சுமப்பது
சுகமெனக்கருதி
நகரும் நத்தை முகம் அழகு!

வெள்ளி, 18 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-211

என்னவளே
கடன் வாங்கித்தான்
செய்ய வேண்டுமென்றால்
கேட்க மாட்டேன் என்கிறாய்!

அடடா
கணக்கில் கூட
கடன் வாங்க மாட்டேனென்றால்
கழித்தலை எப்படிச் செய்வது?

வியாழன், 17 நவம்பர், 2011

மழலை உலகம் மகத்தானது!


குழந்தைகள் உலகில் பெரியவர்களுக்கு இடமில்லை!அதில் உள்நுழைவதற்கு இரண்டு நிபந்தனைகள்.ஒன்று நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்.அல்லது நீங்கள் குழந்தையைப் போல் மாற வேண்டும்.

குழந்தைகள் கல்வி உரிமை தினம்(11.11.2011),குழந்தைகள் தினம்(14.11.2011),குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் (16.11.2011), சர்வதேச குழந்தைகள் தினம்(20.11.2011) என்று பத்து நாட்களுக்குள்ளாகவே பல்வேறு தினங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே!
இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?
குழந்தைகளை கொண்டாடுங்கள் என்ற அவரது வரிகளை சாதாரணமாக புறம் தள்ளி விட முடியாது!

குழந்தைகளை புரிந்து கொள்வதும்,அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து வழிக்கு கொண்டு வருவதும் எல்லோராலும் முடியாது!
என் நண்பர் ஞானவேல் அவர்களின் மகன் மகேஸ்வரன் திடீரென்று வயிற்றை பிடித்துக்கொண்டு அய்யோ அம்மா வயிறு வலிக்கிறதே என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விழுந்து புரளுவான்.வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக்கொள் என்று சொன்னால் சரி என்று சொல்லிவிட்டு இவர் இந்த பக்கம் வந்த உடன் அவன் அந்த பக்கமாக எழுந்து விளையாடிக் கொண்டிருப்பான்.அவனுக்கு பள்ளிக்கு மட்டம் போட வேண்டும் எனும் போதெல்லாம் வயிற்று வலி வந்து விடும்!மருத்துவரிடம் போகலாம் என்றாலும் சளைக்காமல் வருவான்.இப்போது வரைக்கும் அவர் குழம்பிக்கொண்டே இருக்கிறார்.அவனுக்கு உண்மையில் வயிற்று வலியா?இல்லை சும்மா நடிக்கிறானா?என்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை!

குழந்தை வளர்ப்பு என்பது எளிதான ஒன்றல்ல!குழந்தைகள் தானாகவே வளர்ந்து விடுவார்கள்.தானாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொள்வார்கள் என்று பெரும்பான்மையான பெற்றோர்கள் விட்டு விடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுத்தர வேண்டியது பள்ளியின் வேலை.நமது வேலை இல்லை என்று பொறுப்பை தட்டி கழித்து ஆசிரியர்கள் மேல் போட்டு விடுகிறார்கள்.ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் காலையில் ஒரு மூன்று மணி நேரம் மாலையில் ஒரு இரண்டு மணி நேரம் என மொத்தம் ஐந்து மணி நேரம்தான் ஆசிரியரின் நேரடிப்பார்வையில் குழந்தைகள் இருக்கிறார்கள்.அதிலும் ஒரே ஆசிரியர் இருக்க வாய்ப்பில்லை.பாடவாரியாக ஆசிரியர் மாறிக்கொண்டே இருப்பார்.இப்படி இருக்க முழுப்பொறுப்பையும் ஆசிரியர்கள் மேல் திணிப்பது எந்த வகையில் நியாயம்?

பெற்றோர்கள் முன் உதாரணமாக இல்லாமல் குழந்தைகளை திருத்துவது என்பது மிக கடினமானதென்றே தோன்றுகிறது.என் மூன்று வயது மகள் திவ்யஸ்ரீயிடம்,மணி பத்தாகிறது காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும் போய் படு!என்று சொன்னால் நீயும் தானே சீக்கிரம் எழவேண்டும்.இந்த அப்பாவுக்கு வேற வேலையே இல்ல!எப்ப பாத்தாலும் கம்ப்யூட்டரையே நோண்டுவாரு!வந்து படுப்பா!என்கிறாள்.முன்பெல்லாம் என் மூத்த மகள் ஸ்ரீதேவி படுக்கையை ஈரம் பண்ணுவாள். அடித்தும்,திட்டியும் பலனில்லை!தினமும் நள்ளிரவில் எழுப்பி ஒருமுறை மெனக்கெட்டு போய்விட்டு வந்து படுக்கும்படி செய்தவுடன் இப்போதெல்லாம் அந்த பிரச்சனையே இல்லை!

குழந்தைகள் பொதுவாக நான்கு விஷயங்களை வெறுப்பதாக நான் கருதுகிறேன்.
1.நம் விருப்பங்களை அவர்கள் மேல் திணிப்பது
2.எப்போதும் அவர்களை குறை சொல்வது
3.மற்ற குழந்தைகளுடன் அவர்களை ஒப்பீடு செய்வது
4.மிகுந்த கண்டிப்புடன் அவர்களிடம் நடந்து கொள்வது

ஒரு கவிதை:
என்னவளே
வருங்கால சந்ததிக்கு கற்றுக்கொடுக்க
கல்வியை விடவும் சிறந்ததாக
வேறு ஏதேனும் இருக்கிறதா? என்றேன்

ஆமாம்
கல்வியை விடவும் சிறந்ததாக
கற்றுக்கொடுக்க வேறொன்று உள்ளது
அதன் பெயர் விழுமியங்கள்! என்றாய்!


குறிப்பு:
எனது நண்பர்  என்கிற விசு அவர்கள் ஒரு தொடர் பதிவை தொடரச்சொல்லி இருந்தார்.இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.
உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள்.மழலை உலகம் இன்னும் விரியட்டும்.

திங்கள், 14 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-210

என்னவளே
தன் வேலைகளை
தானே செய்ய முடிவெடுத்து
செயல் படுத்தினாராம் காந்தி!

அடடா
துணிகளை துவைக்கும்
துணிவில்லாததால்தான்
அரையாடைக்கு மாறியிருப்பாரோ?

ஞாயிறு, 13 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-209

என்னவளே
சினத்தில் சிவக்கும்
உன் வதனத்தை
எதனுடன் ஒப்பிடுவேன்?

அடடா
சேற்றில் மலரும்
செந்தாமரை என்று
சொன்னால் பொருந்துமோ?

குறுஞ்செய்திகள்-208

என்னவளே
பூக்களை எதிர்பார்த்து
பூப்பறிக்க ஆசையாய்
பூந்தொட்டி நாடி சென்றேன்!

அடடா
வேர்களுக்கு நீர் விடாது
வெயிலில் வாட விட்டால்
வெறுந்தொட்டி தானே இருக்கும்?

சனி, 12 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-207

என்னவளே
மன நெருக்கடிகளின்
துயரங்களுக்கு ஆளாக்கி
ஏன் தவிக்க வைக்கிறாய்?என்றேன்

அடடா
குரூரங்களை பொறுத்து
பிரியங்களை காட்டுவதாய்
எனக்கு நடிக்க வராது! என்கிறாய்

குறுஞ்செய்திகள்-206

என்னவளே
என்னுடைய செயல்பாடுகள்
பிரக்ஞை பூர்வமற்று
நிகழ்கின்றதோ?

அடடா
இல்லையென்றால்
உன் மீது கூட
கோபம் வருமா?

செவ்வாய், 8 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-205

என்னவளே
பள்ளிக்கு அருகில் பெட்டிக்கடை
பேப்பர் பேனா பென்சில் எதுவுமில்லை
தீர்ந்து போய் விட்டதாம்!

அடடா
போதைப்பாக்கும்
புகையிலைப்பொருட்களும்
தடைசெய்யப்பட்டும் தாராளம்!

திங்கள், 7 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-204

என்னவளே
முத்தம் என்பது
ஒரு அழகான பூ என்றால்
நம்ப மறுக்கிறாய்!

அடடா
வேண்டுமானால் நீ
பூ என்று சொல்லிப் பார்
முத்தம் பூக்கிறதா?

சனி, 5 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-203

என்னவளே
ஒரு மூன்றெழுத்து மந்திரம்
என் எல்லா வலிகளையும்
தீர்த்து வைத்து விடுகிறது!

அடடா
அதனால்தான் என்னையறியாமல்
என் உதடுகள் உச்சரிக்கிறது
அந்த மந்திரம் அம்மா!

வியாழன், 3 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-202

என்னவளே
ஒவ்வொரு நொடியும்
நாம் இறந்து கொண்டிருக்கிறோம்
என்பது உண்மயா? என்றேன்

அடடா
ஒவ்வொரு நொடியும்
வாழாமல் இறப்பவர்களுக்குத்தான்
அந்த கவலை! என்கிறாய்

குறுஞ்செய்திகள்-201

என்னவளே
மருந்தகத்தில் இருப்பவன்
என்ன வேண்டுமானாலும்
நினைத்துக் கொள்ளட்டும்!

அடடா
அதற்காக வெட்கப்பட்டால்
அடிவயிற்றில் நெருப்புடன்
அவதிப்படப்போவது யார்?

செவ்வாய், 1 நவம்பர், 2011

ஆறுவது சினம்

பஞ்சு ஆசாரி இருக்காரா?

அவன் எங்க போயி இருக்கான்னு எனக்கு தெரியாது.

எப்போ வருவாரு?

தெரியாது.

செல்லுக்கு போன் பண்ணா எடுக்க மாட்றாருங்க

நீ யாரு?

நான் சாலை அகரம் பள்ளி கூடத்து வாத்தியார்.

முன்னமே சொல்ல கூடாதா சார்! உள்ள வாங்க. உட்காருங்க. பஞ்சு எம் பையன் தான், என்ன விஷயம் சார்?

இடம் இல்லைன்னு சன் ஷேடு வைக்காம வீடு கட்டிட்டோம். இப்போ மழை பெஞ்ச தண்ணி உள்ள வருது. ஜன்னலுக்கு கதவு போட்டு தரேன்னு ரெண்டாயிரம் ரூபா வாங்கிட்டு வந்தார். ஆளையே காணோம். போன் பண்ணா எடுக்க மாட்றாருங்க

என்னை ஒரு வார்த்த கேட்டுட்டு குடுத்துருக்க கூடாதா? குடிகார பய. உங்க காச வாங்கிட்டு போயி குடிச்சிட்டிருப்பான். அவங்க அம்மாவ கூப்பிடறேன் சொல்லிட்டு போங்க. தோ வர்றா பாரு. உம் புள்ள என்னா பண்ணான்னு கேளு.

வீட்டுல ஒரு சின்ன வேலைங்க. உடனே செஞ்சு தரேன்னு காசு வாங்கிட்டு போனார். பத்து நாளாச்சு. ஆளையே காணோம்.

இன்னா சார் நீங்க. வேலையை செய்யறத்துக்கு முன்னால யாராச்சும் காசு குடுப்பாங்களா?

முருகா தியேட்டர் எதிர ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வேலை நடக்குது. அங்க தான் இருப்பன். போயி பாருங்க. என்று சொன்னாள் அந்த அம்மா.

சார் அவன் எங்க பையன் தான். ஆனா ஆள் சரியில்ல. வீட்டு பக்கமே வர மாட்டன். அவன் பசங்க ரெண்டும் கோலியனூர் சிவ சக்தி ஸ்கூல்ல ஆறாவதும், நாலாவதும் படிக்குது. ரெண்டும் எங்க பேர்ல உசுரா இருக்குதுங்க. ஆயா, தாத்தா ன்னு எங்களையே தான் சுத்தி சுத்தி வரும். நாங்க தான் பணம் கட்டி படிக்க வைக்கிறோம். இது வரிக்கும் அதுங்க செலவுக்கு ஒத்த ரூபா குடுத்தவன் கிடையாது. நான் புடிக்கிற வேல ஒன்னு கூட செய்ய மாட்டன். அவனே புடிக்கிற வேலைய தான் செய்வான். அதுவும் அவனுக்கு புடிச்சிருந்தா தான் செய்வான். ஆனா கடை, சாமான் எல்லாம் என்னுது. பெத்தவங்க மனச நோக வைக்கிறானே இவனெல்லாம் ஒரு மனுசனா? அவனால எங்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்ல. நாங்க சொன்னோம்னு சொல்லாத. நீ பாட்டுக்கும் போய் நேரா நில்லு. வச்சா காச வை, இல்ல கையோட வந்து வேலையை செய்ன்னு கூடவே புடிச்சுட்டு போங்க. இல்லைன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு சொல்லுங்க. ஊட்டுக்கு அடங்காத புள்ள ஊருக்காவது அடங்குதா பாப்போம்.

"நம்பி தான் வேலையை கொடுக்குறோம். இப்படி பண்றாரே. சரிங்க" என சொல்லி விட்டு வண்டியை கிளப்பினேன்.

மரத்தடியில் நின்று சிகரெட் ஊதிக் கொண்டிருந்தார் பஞ்சு ஆசாரி. என்னை பார்த்ததும் பாதி சிகரெட்டை அப்படியே போட்டு விட்டு "வணக்கம் சார். கோவிச்சுக்காதீங்க. ஒரு அர்ஜென்ட் வேலை. அதான் வர முடியல. நாளைக்கு கண்டிப்பா வர்றேன்". என்றார். 

அது வரை அடக்கி வைத்திருந்த கோபம், அவரை பார்த்ததும் பொங்கி வந்தது. "எங்கிட்ட எனன சொல்லிட்டு காச வாங்கிட்டு வந்த? அட, காச விடு. போன் பண்ணா எடுத்து பதில் சொல்ல முடியாதா உன்னால."

"சட்டம் எல்லாம் வாங்கி வச்சிட்டேன் சார். கண்டிப்பா இந்த வேலை முடிஞ்சதும் நான் வந்துர்றேன் நீங்க போங்க சார்." என்றார். பொய் சொல்கிறார் என முகத்திலேயே தெரிந்தது. வீட்டுக்கு போனால் பொண்டாட்டி திட்டுவாள். எனன செய்வது எனப் புரியாமல் "இல்ல, நீங்க என் கூட வாங்க. லண்டன் ஹார்ட்வேர் கடைக்கு போவோம். ஜன்னலுக்கு கதவு அப்புறமா போட்டு தாங்க. இப்போதைக்கு ரெண்டு ஆங்கிள் வாங்கி சுவத்துல அடிச்சுட்டு மேல சிமென்ட் சீட் போட்டு முடுக்கிடலாம். உங்களால எங்க வீட்டுல சண்டை. இத கூட உருப்படியா செய்ய முடியலன்னு தினம் பிரச்சினை. நாங்க ரெண்டு பெரும் பேசிக்கறதே இல்லை." கொட்டி தீர்த்தேன். "சரி வாங்க" என அரை குறை மனதுடன் வண்டி பின்னால் அமர்ந்தார்.

பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு போய், பக்கத்து வீட்டில் ஏணி கடன் வாங்கி, ஆங்கிளை அடித்து, சிமென்ட் சீட் போடுவதற்குள் அரை நாள் ஓடி விட்டது. கம்ப்யூட்டர் செண்டரிலிருந்து சீக்கிரம் கொண்டு வந்து விடுங்க சார் என அவர் போன் மேல் போன் போட்டுக் கொண்டிருந்தார். வேலையை முடிக்கும் வரை அவரிடம் முகம் கொடுத்து பேச பிடிக்கவில்லை. வேலை முடிந்ததும் "என்ன கொஞ்சம் கம்ப்யூட்டர் செண்டர்ல விட்டுடுங்க சார்" எனக் கேட்டார். கொடுத்த காசுக்கே வேலை செய்யல, இதுக்கு வேற கூலி கேப்பானோ என மனதுக்குள் நினைத்துக் கொண்டே "சரி வாங்க" என்று சொல்லி வண்டியை கிளப்பினேன். கொஞ்ச தூரம் போயிருப்போம். "சார், லவ் பண்றது தப்பா!" என்று கேட்டார். இவன் என்ன பீடிகை போடுகிறான் என நினைத்துக் கொண்டு இல்லை என்றேன்.

"அப்பா சொந்தக்காரப் பொண்ணை கட்டிக்க சொன்னார். நான் முடியாது, இவளை தான் கட்டிக்குவேன்னு அடம் புடிச்சு எம் பொண்டாட்டிய கட்டிகிட்டேன். அவள எங்க வீட்டுல இருந்தவங்களுக்கு சுத்தமா புடிக்கல. இதனாலேயே அடிக்கடி பிரச்சினை வந்துச்சு. எப்பவுமே சண்டை தான். ஒரு நாள் கோவத்துல அப்பா அவள அடிக்க போக, தூக்கு போட்டுக்கிட்டு செத்துட்டா. அப்போ நான் வெளியூர்ல வேலைக்கு போயிருந்தேன். நான் அவ முகத்த கூட பாக்க முடியல. எல்லாம் முடிஞ்சு போச்சு. என்னால அவள மறக்க முடியல.செத்துடலாமுன்னு டிரை பண்ணேன், முடியல. ரெண்டு புள்ளைங்களும் அப்பா அம்மா கூட தான் இருக்குதுங்க. அவள மறக்க முடியாம தான் குடிக்கிறேன். உங்கள ஏமாத்தனும்னு  எண்ணமில்ல. தப்பா நெனச்சுக்காதீங்க. வேலை செஞ்சுட்டு சும்மா போக கூடாது.ஒரு பத்து ரூபாய் இருக்குமா என்றார்.

"மழை தண்ணி வீட்டுக்குள்ள வராதுன்னு நெனைக்கிறேன். பைபர் டோர் போடா குடுத்த காசுக்கு அப்புறமா கொசுவல அடிச்சு குடுத்துடுங்க. குடிச்சு உடம்ப கெடுத்துக்காதீங்க. புள்ளைங்கள பாத்துக்கோங்க." என்று சொல்லி கையில் ஐநூறு ரூபாயை திணித்து விட்டு கிளம்பினேன். பஞ்சு ஆசாரி மேல் இருந்த கோபம் பஞ்சாய் பறந்திருந்தது.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-200

என்னவளே
என்று ஆரம்பித்து
தத்து பித்து என்று
என்னென்னவோ உளறினேன்!

அடடா
என் முதல் வரி
ஒரு கவிதை என்பதால்
இன்னும் ஓடுகிறது வண்டி!

சனி, 29 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-199

என்னவளே
காதலில் தோற்றால்
பிறருக்கு தெரியும்படி
ஆண்கள் தாடி வைக்கிறார்கள்!

அடடா
காதலில் தோற்றால்
பிறருக்கு தெரியாதபடி
பெண்கள் மூடி வைக்கிறார்கள்!

வெள்ளி, 28 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-198

என்னவளே
சென்றமுறை சுழித்தோடும் நீர்ப்பெருக்கில்
பாதத்தின் அடியில் மணல் நழுவ
கைகோர்த்து நடந்தோம்!

அடடா
இம்முறை சுடுமணலின் நீள்வெளியில் 
அடுத்தமுறை  ஆற்றுத்திருவிழாவிற்கு
மணலாவது மிஞ்சுமா?

குறுஞ்செய்திகள்-197

என்னவளே
நீ விசுக் விசுக்கென்று
கைவீசி நடப்பது
அழகென்றுதானே சொன்னேன்!

அடடா
நீ பொசுக் பொசுக்கென்று
இதற்கும் கூட
கோபப்பட்டால் எப்படி?

வியாழன், 27 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-196

என்னவளே
எத்தனையோ தடவை
பார்வைகள் பரிமாறியதெல்லாம்
மறந்து போய் விட்டது!

அடடா
நீ என்னை பார்க்காமல்
கடந்து போன ஒரு தடவை
இன்னும் நினைவில் இருக்கிறது!

குறுஞ்செய்திகள்-195

என்னவளே
உலகத்தின் வெளிச்சத்தை
வீட்டுக்குள் கொண்டுவருகிறது
ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்!

அடடா
இருட்டிலும் கூட உலகத்தை
மிகப்பிரகாசமாக்குகின்றன
மெழுகுவர்த்தியும் புத்தகங்களும்!

புதன், 26 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-194

என்னவளே
அத்திக்காய் இத்திக்காய்
எத்திக்காய் இருப்பினும்
மாதுளம் காய் என்றேன்

அடடா
தனக்காய் வாழாது
பாவைக்காய் வாழக்காய்
மாதுளம் கனியாகும் என்கிறாய்!

செவ்வாய், 25 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-193

என்னவளே
தீபாவளி கொண்டாட
தித்திப்பு புத்தாடை
இவை இருந்தால் போதாதா?

தித்திப்பை பகிர்ந்து
புத்தாடை உடுத்தி
தீ விபத்தில்லா தீபாவளி
கோலாகலமாக கொண்டாடுவோம்!

குறுஞ்செய்திகள்-192

என்னவளே
கழிவை அகற்று
குப்பைகள் சேர்ப்பதால்
பயன் ஒன்றும் இல்லை!

எவ்வாறேனும்
ஒவ்வொன்றையும்
செய்துதானாக வேண்டும்
எரிக்கவோ புதைக்கவோ!

திங்கள், 24 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-191

என்னவளே
எல்லா உபாதைகளுக்கும்
என்னையே வைத்தியம் கேட்டு
தொல்லை பண்ணுகிறாய்!

அடடா
மருத்துவர் அறை
அமைதி காக்கவும் என்பதை
தவறாக புரிந்து கொண்டாயோ?

குறுஞ்செய்திகள்-190

என்னவளே
மொட்டை போட்டால்
அழகிய குல்லாய் என்று
ஆசை காட்டினாய்!

போட்ட பின்
திருநெல்வேலிக்கே அல்வா
திருப்பதிக்கே லட்டு மாதிரி
குல்லாவுக்கே குல்லா என்கிறாய்!

குறுஞ்செய்திகள்-189

என்னவளே
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வேண்டவே வேண்டாம்!

ஆமாம்
முடிந்த வரை
பயன் படுத்துவோம்
அதே பழைய நெகிழியை!

குறுஞ்செய்திகள்-188

என்னவளே 
ஊர்தோறும்
நாறிக்கொண்டிருக்கின்றன
பேருந்து நிலைய கழிப்பறைகள்!

அடடா 
அரசாங்கம் பராமரிக்க 
இதைவிட முக்கியமானவைகள் ஏராளம் 
வேண்டுமானால் மூக்கை மூடிக்கொள்!

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-187

என்னவளே
எல்லோரையும் காப்பாற்றும்
கடவுளர்கள் தானே
கோவிலுக்கு உள்ளே இருக்கிறார்கள்?

அடடா
யார் இப்படி
பெரிதாக எழுதிவைத்தது?
திருடர்கள் ஜாக்கிரதை! என்று

குறுஞ்செய்திகள்-186

என்னவளே
எல்லா ஆயுதங்களையும்
பயன் படுத்த தெரிந்தவனே
மிகப்பெரிய வீரன் என்று சொன்னேன்

நீயோ
ஆயுதங்களின் தீமையறிந்து
அதை பயன்படுத்த தெரிந்தும்
தொடாதவனே மாவீரன் என்கிறாய்!

சனி, 22 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-185

என்னவளே
மரம் ஒரு உயிர்
மனிதன் ஒரு உயிர்
பிறருக்காக உயிரை கொடுப்பது பெருமை!

மரம் சிலுவை செய்ய
உயிர் கொடுத்தது
சிலுவையில் உயிர் கொடுத்த
மனிதன் மட்டும் தேவன் ஆனார்!

வியாழன், 20 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-184

என்னவளே
நான் இருக்கும் வரை
காதல் உனக்கு ஒருபோதும்
புரியப் போவதில்லை!

ஆமாம்
நான் என்பதை தூக்கி
தூரமாக எறி
காதலை உணர்!

குறுஞ்செய்திகள்-183

என்னவளே
கூரைக்கு மேலே சேவல்
வலக்கை பக்கம் தெற்கு
இடக்கை பக்கம் வடக்கு

கிழக்கு பக்கம் வாசல்
கோழி இடும் முட்டை
எந்த பக்கம் விழுமென்று
இப்படியா கடிப்பாய்?

குறுஞ்செய்திகள்-182

என்னவளே
முரண்பாடுகளின் மூட்டைக்கு
அழகான பெயர் பெண் என்று
கேலி செய்தேன்

அடிப்பாவி
தவறுகளின் தொகுப்புக்கு
பொருத்தமான பெயர் ஆண் என்று
காலை வாருகிறாய்!

குறுஞ்செய்திகள்-181

என்னவளே
அப்பாவாகும் தகுதி மட்டுமே
ஒரு ஆண்மகனுக்கு
அடையாளம் ஆகுமா? என்றாய்

உண்மைதான்
இத்தனை குறைகளோடு
என்னை சகித்துக்கொள்ள
எத்தனை பெரிய மனம் உனக்கு?

செவ்வாய், 18 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-180

என்னவளே
வருங்கால சந்ததிக்கு கற்றுக்கொடுக்க
கல்வியை விடவும் சிறந்ததாக
வேறு ஏதேனும் இருக்கிறதா? என்றேன்

ஆமாம்
கல்வியை விடவும் சிறந்ததாக
கற்றுக்கொடுக்க வேறொன்று உள்ளது
அதன் பெயர் விழுமியங்கள்! என்றாய்

சனி, 15 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-179

என்னவளே
நான் ஏன் ரத்ததானம்
செய்ய வேண்டும்? என்று
கேள்வி கேட்டேன்.

நீ ஏன் ரத்ததானம்
செய்யக் கூடாது? என்ற
கேள்வியையே பதிலாக்கி
யோசிக்க வைத்து விட்டாய்!

குறுஞ்செய்திகள்-178

என்னவளே
நான் பாதிஆம்பள
என்பது பெண்ணுக்கு பெருமை!
ஆனால் ஆணுக்கு?

எது எப்படியோ
முல்லாக்கதையில்
கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள்
என்றகதை தெரியும்தானே?

குறுஞ்செய்திகள்-177

என்னவளே
மல ஜலம் கழிக்க
பார்க்க கேட்க நுகர
ஜோடிகளை படைத்தான் இறைவன்!

நல்ல வேளை
வாயை விட்டுவிட்டு
பிறவற்றை மட்டும்
ஒரு ஜோடி படைத்தான்!

வெள்ளி, 14 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-176

என்னவளே
தூறலை அனுபவிக்காமல்
கதவடைத்து தூங்கியதற்காய்
வருத்தப்பட்டு நின்றேன்!

அடடா
குறுமரத்தை குலுக்கி
திடீர்மழை அனுபவம் தந்து
திகைக்க வைத்து விட்டாய்!

வியாழன், 13 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-175

என்னவளே
நான் ஏன் நெகிழியை
பயன் படுத்துகிறேன் என்பதற்கு
ஆயிரம் காரணங்களை அடுக்கினேன்!

உண்மையிலேயே
நெகிழியை பயன்படுத்தாமல் இருக்க
ஒரு காரணம் கூட கிடைக்கவில்லையா?
எனக்கேட்டு நெகிழ வைத்துவிட்டாய்!

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-174

என்னவளே
கொள்ளி வைத்தால் பிணம் எரியும்
ஆனால் கொள்ளி வைப்பவரையே
எரிக்கும் பிணம் எது என்றாய்?

அடடா
வெள்ளை ஆடை போர்த்தி
கொள்ளி நமக்கு வைக்க தயாராய்
காத்திருக்கிறது சிகரெட் பிணம்!

சனி, 8 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-173


என்னவளே
நம்மிடம் எது இல்லையோ
அதை பெறவே
கடவுள் வேண்டும் என்றேன்!

நீயோ
நம்மிடம் எது இருக்கிறதோ
அதை கொடுத்தால்
கடவுளாகவே ஆகலாம் என்கிறாய்!

வியாழன், 6 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-172

என்னவளே
விபத்து நடக்க
கவனக்குறைவான
ஒரு நொடி போதும்!

ஆனால்
மறு நொடியில்
தொடங்கும் துயரம்
வாழ்நாளைக்கும் நீளும்!

குறுஞ்செய்திகள்171

என்னவளே
நீயா இப்படி?
கத்தியால் வெட்டுவதில்
இத்தனை சந்தோஷமா?

எல்லோரும் வேறு
கைத்தட்டுகிறார்கள்!
சரி சரி வெட்டு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

குறுஞ்செய்திகள்-170

என்னவளே
என் மருதாணி விரல்கள்
செக்க சிவந்ததற்காய்
பெருமைப்பட ஆசை!

அடடா
உன் வெட்கத்தை விடவும்
அதிகமாய் சிவக்க
மருதாணிக்கு துணிவில்லை!

புதன், 5 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-169


என்னவளே
நம் மீதுதான்
எத்தனை கண்கள்
திருஷ்டி சுற்றவா? என்றேன்!

சாலை விபத்தில்
மண்டை உடையும்படி
பூசணி உடைக்கும் முண்டங்களோடு
நீயும் சேராதே என்கிறாய்!

செவ்வாய், 4 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-168

என்னவளே
உடம்பின் உதவியின்றி
ஒரு துளி உதிரத்தையும்
உருவாக்க முடியாது!

ஒரு துளி உதிரமாவது
தானம் செய்யாத
உடம்பால் பயன் ஏது?
ரத்ததானம் செய்வோம் வா!

குறுஞ்செய்திகள்-167


என்னவளே
உன் கதைகளை
பொறுமையாக கேட்கிறேன்
என்பதற்காக இப்படியா?

சரி விடு!
எல்லோரிடமும் ஏராளமாய்
கதைகள் இருக்கின்றன!
யார்தான் கேட்பது?

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-166


என்னவளே
இந்த விஞ்ஞானம்
காதலை கைபேசிக்குள்
முடக்கி போட்டுவிட்டது!

நம்மைப்போல
மிதிவண்டி தள்ளியபடி
நெடுந்தூரம் பேசி நடக்கும்
ஜோடிகளே காணோமடி!

சனி, 1 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-165

என்னவளே 
எண்களை படிக்காமல் 
கணக்கு பண்ண முடியாது 
என்கிறார்கள்!

ஆனால் 
கண்களை படித்தே 
கணக்கு பண்ணி விட்டாய்!
எப்படியடி?

குறுஞ்செய்திகள்-164

என்னவளே 
நீ மிகச்சாதாரணமாக 
வாசலை கடந்து 
தெருமுனை திரும்பிவிடுகிறாய்!

பாவம்!
என் மொட்டைமாடியின் 
படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் 
படாத பாடு படுகின்றன!

குறுஞ்செய்திகள்-163

என்னவளே 
என்னவாயிற்று உனக்கு?
உன் எல்லாப் பொய்களையும் 
ரசிப்பதென்னவோ உண்மைதான்!

அதற்காக 
ஒன்றுமில்லை உடம்புக்கு
நன்றாய்தான் இருக்கிறேன் 
என்று பொய் சொல்லாதே! 

வியாழன், 29 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-162

என்னவளே
வாழ்வின் பேரானந்தத்தை
இரசிக்காத கிறுக்கர்கள்
யார் தெரியுமா?

கடற்கரையின் ஈரமணலில்
காதலியின் பெயரை
ஒரு முறையேனும்
கிறுக்காதவர்கள்!

புதன், 28 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-161

என்னவளே 
அழகான பரிசுப்பொருட்கள் 
மேலும் அழகாகிவிடுகின்றன
உன்னால் தரப்படும்போது!

ஆனாலும் 
உன் அன்பை போன்ற
எளிமையான பரிசுக்கு முன்பாக  
எதுவுமே அழகானதில்லை!

குறுஞ்செய்திகள்-160

என்னவளே 
உனக்காவது பரவாயில்லை 
யோசிக்க முடியாமல்
செய்து விட்டது!

ஆனால் எனக்கோ 
யோசிக்கும்  மூளையையே 
இல்லாமல் செய்து விட்டது 
இந்த காதல்!

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-159

என்னவளே 
எப்போதும் உன் பெயரை
உரக்க கூப்பிடுவதற்கு 
பயமாய் இருக்கிறது!

ஏனெனில் 
மெலிதான உன் பெயரை 
தென்றல் கிழித்து விட்டால் 
என்ன செய்வேன்?

திங்கள், 26 செப்டம்பர், 2011

வணக்கம் வைக்காதே!

ஒரு ஊர்ல ஒரு முதலாளிக்கிட்ட நிறைய பேர் வேலை செஞ்சாங்க.காலையில வந்த உடனே முதல் வேலையா முதலாளிக்கு வணக்கம் வச்சிட்டுத்தான் மறுவேலை பாப்பாங்க.ஆனா அதுல ஒருத்தருக்கும் முதலாளிக்கும் மனஸ்தாபம் ஆயிடுச்சு!அதுல இருந்து அந்த தொழிலாளி மட்டும் முதலாளிக்கு வணக்கம் வைக்கறத நிறுத்திட்டாரு!

இது முதலாளிக்கு மரியாதை குறைவா பட்டது!அவரும் அந்த தொழிலாளிய தனியே கூப்பிட்டு எனக்கு வணக்கம் வைக்க போறியா இல்லியான்னு மிரட்டினாரு!தொழிலாளி பயப்படுற மாதிரி தெரியல.நீ என்ன பண்ணுறியோ பண்ணிக்கோன்னு சொல்லிட்டாரு.முதலாளிக்கு ஆத்திரம் தாங்க முடியல!என்ன பண்ணலாம்னு யோசிச்சாரு.தினமும் தொல்லை கொடுத்தாரு!

இந்த விஷயம் எல்லா தொழிலாளிக்கும் தெரிஞ்சி போச்சி.ஆள் ஆளுக்கு கூடிப்பேச ஆரம்பிச்சிட்டாங்க!கொஞ்சம் பேரு முதலாளி பேர்லதான் தப்புன்னாங்க.கொஞ்சம் பேரு அந்த தொழிலாளி பேர்லதான் தப்புன்னாங்க!ஆனாலும் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த மாதிரி தெரியல!தினம் தினம் பிரச்சனை பெரிசாகிகிட்டேதான் இருந்துச்சு!முடியவேயில்லை!

திடீர்னு ஒரு நாள் பிரச்சனை தலை கீழா மாறிடுச்சு!யாருக்கும் ஒண்ணுமே புரியல!அந்த தொழிலாளி காலையிலே வந்த உடனே முதல் வேலையா ஓடிப்போய் முதலாளிக்கு எல்லோரும் பாக்கற மாதிரி ரொம்ப பணிவா வணக்கம் சொல்றாரு!ஆனா முதலாளிக்கு பயங்கர கோவம் வருது! அதப்பத்தி கவலைப்படாம அந்த தொழிலாளி போய்ட்டாரு.

மறுநாளும் அதே மாதிரி அந்த தொழிலாளி அவர பாக்கறப்ப எல்லாம் ரொம்ப மரியாதையோட வணக்கம் வைக்கிறாரு. ஆனா முதலாளி ரொம்ப ரொம்ப கோவத்தோட உச்சிக்கே போயிடுறாரு!எனக்கு உன்னோட மரியாதை தேவையில்லை.
வணக்கம் வைக்காதேன்னு கத்தறாரு!அவரு ஏன் அப்படி மாறிட்டாருன்னு உங்க கமெண்ட்ல சொல்லுங்க!நான் அப்புறமா ஏன்னு உங்ககிட்ட மட்டும் சொல்றேன்!...




(அந்த தொழிலாளி முதலாளியை தனியா சந்திச்சி மரியாதை மனசில் இருந்து வரணும்.இது மாதிரி தொந்தரவு பண்ணி வரக்கூடாது .  நாளையிலர்ந்து நான் உனக்கு தினமும் வணக்கம் வைப்பேன்.ஆனா அந்த வணக்கத்துக்கு போட முண்டம்னு அர்த்தம் அப்பிடின்னு சொல்லிட்டானாம்! எப்பூடி?ஹி...ஹி...) 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-158

என்னவளே
வண்டி ஓட்ட தெரிந்த பின்னும்
தலைக்கவசம் அணியச்சொல்லி
சும்மா ஏன் தொல்லை பண்ணுகிறாய்?

தலைவிதி வசம்
என்று தலைவி சும்மா விட்டால்
தலைவி திவசம் கொண்டாடிவிட்டு
சும்மாதான் இருந்தாக வேண்டுமென்கிறாய்!

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-157

என்னவளே
விரல்களை மடக்கி மடக்கி
கணக்கு படிக்க கூப்பிட்டால்
உடைந்துவிடும் என்கிறாய்!

அடடா
பெண்களின் விரல்களை
வெண்டைகாய்க்கு வைத்தது
எவ்வளவு பொறுத்தம்!

குறுஞ்செய்திகள்-156

என்னவளே
கணக்கும் இனிக்கும்
தென்னங்குச்சிகளை கொண்டு
பெருக்கல் சொல்லித்தரவா?

அடிப்பாவி
குச்சாட்டம் ஆடுகிறாயே
தென்னந்துடைப்பம் கொண்டு
பெருக்க சொல்லித்தரவா?

வியாழன், 22 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-155

என்னவளே
அம்மாவிடம் பாடியதாய் நினைவு
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு!

இப்போதெல்லாம்
இலையுமில்லை ஈயுமில்லை
நம் சந்ததி புல்லும் நெல்லும்
எப்படியிருக்குமென கேட்குமோ?