ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சதுரங்க போட்டிக்கான மென்பொருள்

சதுரங்கப் போட்டியினை நடத்துவதற்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு.http://www.mediafire.com/download/n0vqri3wai898ea/sp98.rar

சனி, 19 அக்டோபர், 2013

சதுரங்க விதிமுறைகள்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

சதுரங்க விதிமுறைகளை அறிய மேலே உள்ள இணைப்பை சொடுக்கி பயன் பெறுக.

வியாழன், 10 அக்டோபர், 2013

கீதாஞ்சலி

WHERE THE MIND IS WITHOUT FEAR
Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.

-Rabindranath Tagore
மனம் அச்சமின்றி தலைநிமிர்ந்து
எங்கு நிற்குமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

கல்வி இலவசமாய் அனைவருக்கும்
எங்கு கிடைக்குமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

உலகம் பூசல்களால் பிரியாமல்
எங்கு உள்ளதோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

சொற்கள் உண்மையின் அடிப்படையில்
எங்கு தோன்றுமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

விடாமுயற்சி திருத்தம் நோக்கி
எங்கு செல்லுமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

சிந்தனையோடை பழக்கத்தினால் தொலையாமல்
எங்கு ஓடுமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

உள்ளத்தை விரிந்துபரந்த எண்ணம்செயல்
எங்கு நடத்துமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!
-மகாகவி இரவீந்திரநாத தாகூர்.

சதுரங்கம் ஆடுவோமா?-1

http://wtharvey.com/

நீண்ட நாட்களாகவே சதுரங்கம் குறித்தான ஒரு பதிவை இட வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஏற்கனவே சதுரங்கம் விளையாடத் தெரிந்தவர்கள் மேலே உள்ள இணைப்பை சொடுக்கி பயன் பெறுக.

புதன், 2 அக்டோபர், 2013

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழை அரியணை ஏற்றிடுவோம்-அதன்
தொன்மையை நாளும் போற்றிடுவோம்!
மூச்சென தமிழ்ப்பணி ஆற்றிடுவோம்-அதை
முயற்சிக்க மறந்தால் தோற்றிடுவோம்!

ஆயிரமாயிரம் மொழிகள் இருப்பினும்
தமிழின் அழகுக்கு ஈடுஇல்லை!
அன்னைத் தமிழுக்கீடாய் எவரும் கொடுத்திட
உலகில் எதுவும் வேறுஇல்லை!

அவள் கால்கள் கடந்து போகும் பாதை
அது முடிவேயின்றி இன்னும் நீளட்டுமே!
இந்த மண்ணில் முத்தமிழ் என்றென்றுமே
நித்தம் நிலைபெற்று நம்மை ஆளட்டுமே!

சங்கங்கள் வளர்த்தவள் வாழியவே!
சிந்தையில் நிறைந்தவள் வாழியவே!
அன்புடை அகத்தாள் வாழியவே!
போருடை புறத்தாள் வாழியவே!
அவள் கால்கள் கடந்து போகும் பாதை
அது முடிவேயின்றி இன்னும் நீளட்டுமே!
இந்த மண்ணில் முத்தமிழ் என்றென்றுமே
நித்தம் நிலைபெற்று நம்மை ஆளட்டுமே!

காப்பியம் கொண்டவள் வாழியவே!
கணினியை கண்டவள் வாழியவே!
செம்மொழி ஆனவள் வாழியவே!
மின்மொழி ஆனவள் வாழியவே!                  
அவள் கால்கள் கடந்து போகும் பாதை
அது முடிவேயின்றி இன்னும் நீளட்டுமே!
இந்த மண்ணில் முத்தமிழ் என்றென்றுமே
நித்தம் நிலைபெற்று நம்மை ஆளட்டுமே!

(ஆனந்த யாழை மீட்டுகிறாய்-தங்க மீன்கள் பாடல் மெட்டு)