உறுப்பினர்கள்

சனி, 26 மே, 2012

குறுஞ்செய்திகள்-248


என்னவளே
ஊர் போய் திரும்புகையில்
சொர்கத்தை பார்த்த மாதிரி
ஆனந்தம் ஏன்? என்கிறாய்

அடடா
தொடக்கக்கல்வி பயின்ற
பள்ளிக்கூடத்தை விட
சொர்க்கம் இருக்கிறதா என்ன?

வியாழன், 24 மே, 2012

குறுஞ்செய்திகள்-247


என்னவளே
பெருமழைக்காலம் தவிர்த்து
பெரும்பாலும் நீரில்லாமல்
வற்றியே கிடக்கிறது ஆறு!

அடடா
ஆற்றுத்திருவிழாவின் போது
அணையைத் திறந்தால்
அதுவே போதும் நமக்கு!

புதன், 23 மே, 2012

குறுஞ்செய்திகள்-246


என்னவளே
எப்போதும் கணினி
இடையிடையே தொலைக்காட்சி
பாவம் இளந்தலைமுறை!

அடடா
பஸ் ஆட்டம் மிஸ் ஆட்டம்
ஐஸ் ஆட்டம் கல் ஆட்டம்
எவ்வளவு இழந்துவிட்டார்கள்?

குறுஞ்செய்திகள்-245


என்னவளே
இனிமையானது எது?
கொடுமையானது எது?
விடைசொல் என்று கேட்டேன்

அடடா
இரண்டுக்கும் விடை தனிமை!
நாமே தேர்ந்தெடுத்த தனிமை!
பிறர் பரிசாக கொடுத்த தனிமை!

குறுஞ்செய்திகள்-244


என்னவளே
நடக்கையில் உரையாடுவது
இரு இடங்களுக்கு இடையே
இடைவெளியை பாதியாக்குகிறது!

அடடா
சண்டையில் உரையாடுவது
இரு மனங்களுக்கு இடையே
இடைவெளியை இரட்டிப்பாக்குகிறது!