வெள்ளி, 1 ஜூலை, 2011

மெட்டுப்பாடல்கள்-13

மௌனமே காதல் ஆனது
வார்த்தைகள் தொலைந்து போனது
நினைவுகள் இனிமையானது
கனவுகள் கவிதையானது
ஆருயிரே...ஆருயிரே...
*
பூஞ்சோலைகள் பூப்பூத்திட
மழை தூவும் ஆகாயம்
பூஞ்சோலைகள் பூப்பூப்பதால்
அதற்கென்ன ஆதாயம்

இந்த பூஞ்சோலையே அடி நாம் ரசிக்கத்தான்
இந்த பூலோகமே அடி நாம் வசிக்கத்தான்

ஆருயிரே... ஆருயிரே...
*
உன் கண்களில் விழும் தூசுக்கு
என் கண்கள் கலங்குமடி
உன் பாதத்தில் முள் தைத்திட
என் நெஞ்சம் வலிக்குமடி

நீ நதியாகிட நான் கரையாகிறேன்
நீ நிலவாகிட நான் வானாகிறேன்

ஆருயிரே...ஆருயிரே...
*
(குறிப்பு:மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: