வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மெட்டுப்பாடல்கள்-21

பூ மேகம் நெஞ்சில் பூ மேகம்
என் கண்ணில் கொஞ்சம் நீர் தூவும்
நெஞ்சில் என்றும் சந்தோஷமே
கண்ணீர் பாடும் சங்கீதமே
*
ஒவ்வொரு நிமிஷத்திலும்
என்னை அறியாமல் உனை நினைத்தேன்
நுரையீரல் சிற்றறையில்
சுவாச காற்றாக உனை நிறைத்தேன்

நீர் இன்றி வாடும் பயிராக
அட நீ இன்றி உயிர் ஆகுமே
இலையே உந்தன் பச்சயம் நான்
உன்னை என்றும் பிரியேன் நிச்சயம் தான்
*
காதலின் தீபத்திலே
கண்ணே திரியாக நான் எரிவேன்
உயிருள்ள காலம் வரை
உன்னோடு துணையாக நான் வருவேன்

நிலவாக என்றும் நீதானே
எந்தன் மனம் என்னும் வானத்திலே
என்னில் என்னை காணவில்லை
அடி வேறொன்றும் சொல்ல தோணவில்லை
*
(குறிப்பு:ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம் பேரை சொல்லும் ரோசாப்பூ என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: