வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மெட்டுப்பாடல்கள்-16

அன்பே உன் கண்களில்
கண்ணீரை காட்டாதே
கண்ணீரை காட்டியே
இதயத்தை வாட்டாதே

கண்ணோடு சோகம் ஏன் ஏன் ஏன்?

இன்முகம் நீ காட்டிடு
என்னுயிர் நீ காத்திடு
*
பனிகூட தாங்காத மலர் உந்தன் அங்கமோ?
புரிந்தவன் நான் அதை உரைத்திடல் பங்கமோ?
உனை பிரியும் நேரமோ
உயிர் கூட பாரமோ
உன் சோகம் தீருமோ
என் தேகம் வாழுமோ
காதல் மரம் பூக்குமோ
கண்ணீர் வரம் கேட்குமோ
கண்ணை பிரிந்திடும் இமை உள்ளதோ?
*
என் வானில் மேகமோ பூமழைகள் பொழிந்தது
பூமழைகள் பொழிந்ததில் சந்தோஷம் வழிந்தது
காலங்கள் மலர்ந்தது
காயங்கள் மறைந்தது
துக்கங்கள் தொலைந்தது
தூளாகக் கரைந்தது
சொர்கம் தான் திறந்தது
ஆனந்தம் பிறந்தது
உன்னை மறந்திடும் நாள் இறப்பேன்!
*
(குறிப்பு:எங்கே என் புன்னகை? எவர் கொண்டு போனது?தீப்பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: