வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மெட்டுப்பாடல்கள்-18

ஏ மழையே நீ விழவே
ஓர் அழகு பூ நனைய
அம்மம்மா கண் கொள்ளா அழகே

சிரிக்கிறதே ரோஜாப் பந்து
சிவக்கிறதே நாணம் வ்ந்து
வாசம் வீசும் பேசும் பூவை கண்டேனே
*
சின்ன கண்கள் ரெண்டை கண்டால் கவிதை வாராதோ?
உந்தன் கையில் என்னைத் தந்தால் ஆயுள் நீளாதோ?
உனையே நினைத்தேன் தினந்தோறுமே
நினைத்து வியந்தேன் கணந்தோறுமே
முள்ளோடும் தான் பூக்கும் ரோஜாமலர்
*
பாதை எங்கும் பூத்துக் குலுங்குது பாவையின் பாதம் பட்டு
போதை தன்னால் ஏறுது எனக்கு பாவையின் பார்வை தொட்டு
பிறப்பை எடுத்தேன் எதற்காகவோ
காதல் படித்தேன் அதற்காகவோ
சஞ்சீவியாய் நாளும் வாழ காதல் செய்வோம்
*
(குறிப்பு:ஓ மரியா நீ வரியா ஈமெயிலில் லவ் லெட்டெர் தர்ரியா என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: