புதன், 15 ஜூன், 2011

மெட்டுப்பாடல்கள்-6

உன் பேரை சொல்லித்தானே
என் இதயம் துடிக்கும்
உன் பேரை மறந்து விட்டால்
என் இதயம் வெடிக்கும்

பூவே நீயும் சொல்லுகின்ற
ஒரே ஒரு வார்த்தை போதும்
உலகத்தையே காலடியில்
கொண்டு வந்து சேர்ப்பேன்
*
வஞ்சிக்கொடி வீசும் பார்வையில் தானே
பஞ்சு உள்ளம் பத்திக்கிருச்சு
கொஞ்சி அவள் பேசும் வார்த்தையில் தானே
இன்ப வெள்ளம் பொத்துகிருச்சு

சிறகு என்றும் பறவைக்கென்று
சிட்டு நீயும் எனக்கென்று எனக்கென்று
தொட்டு கொள்ள எதுக்கடி கணக்கொன்று

மேகம் பூமிக்கு மழையினை தந்திட
வானம் மறுக்கிறதா?
பெண்மை ஆணுக்கு அழகினை தந்திட
நாணம் மறுக்கிறதே

இது எந்த ஊரு நியாயமடி?
இது என்ன என்ன நீதியடி?
நெஞ்சு எண்ணி எண்ணி வேகுதடி
உள்ள அன்னந்தண்ணி போகலடி
*
நீல வண்ண கடலு என்னைக்குமே
தண்ணி வத்தி போவதில்லை
பூவே உந்தன் நினைவு என்னைக்குமே
என்னை விட்டு போவதில்லை

பக்கத்துல வந்துவிடு
வெக்கத்துக்கு விடை சொல்லி அனுப்பிடு
வெத்தலைக்கு சுன்னாம்பென இருந்திடு

உன்னுடைய கூந்தலில் என்னுடைய உசிர
பறிச்சு சூடிக்கிட்ட
உன்னுடைய காதல உள்ளத்துல மறைச்சு
ஏண்டி மூடிக்கிட்ட

இது எந்த ஊரு நியாயமடி?
இது என்ன என்ன நீதியடி?
நெஞ்சு எண்ணி எண்ணி வேகுதடி
உள்ள அன்னந்தண்ணி போகலடி
*
(குறிப்பு:கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் என்ற பாடல் மெட்டு)

1 கருத்து:

murugan சொன்னது…

arumai maappla arumaiyaana sinthanaikal