ஞாயிறு, 19 ஜூன், 2011

தொலைந்து போன ஒலிகள்

ஒரு தை மாதத்தின் முகூர்த்த வேளையில்
மணக்கோலத்தில் பார்த்தது
விடைபெற்றுக்கொள்ளக்கூட திரணியற்று
உடைந்த இதயத்தோடு திரும்பினேன்

இப்போதெல்லாம்
மழைக்கால மாலையின் ஈரக்காற்றில்
புகுந்து வரும் மெலிதான பெண் குரலோ
உன் வரவின் செய்தி சொல்லி
வாசல் தாண்டும் கொலுசு சப்தமோ
கேட்பதில்லை

நிலா இரவை கனவின் ஊடேயும் 
வெறுமை வாழ்வை 
மௌனத்தால் நிரப்பியும்
நலமாய் இருப்பாய் என்ற
நம்பிக்கையில் கழிக்கிறேன்!


கருத்துகள் இல்லை: