புதன், 15 ஜூன், 2011

மெட்டுப்பாடல்கள்-9

வெண்ணிலவே என்  வெண்ணிலவே
நான் தன்னிலை இழந்தேனே
உன் நினைவில் நான் என் நினைவை
ஒரு கனவாய் மறந்தேனே

எந்தன் காதலியே நான் உயிர் பூவாய்
உந்தன் காதலில் மலர்ந்தேனே
விழி வீச்சில் நான் உயிர் தொலைத்து
உந்தன் மடியினில் விழுந்தேனே
கிளி பேச்சில் பின் உயிர் கிளைத்து
ஒரு நொடியினில் எழுந்தேனே
*
ஆறறிவில் எந்தன் ஐந்தறிவை
உந்தன் அழகுக்கு தந்தேனடி
மீதமுள்ள எந்தன் ஓரறிவும்
உந்தன் நினைவுக்கே சொந்தமடி

பூமகளே உன்னை பிரிந்திருந்தால்
நிமிடம் யுகமாய் நீளுதடி
நெஞ்சோடு நீயும் சேர்ந்திருந்தால்
யுகமும் நிமிடமாய் மாறுதடி

பூவெல்லாம் உன் வாசத்தை
கடனாய் கேட்குதடி
இந்த பூமியே உன் சுவாசத்தால்
புது ஜென்மம் எடுக்குதடி
*
தாலாட்டு பாடும் பூங்காற்று
தினம் உன் பெயர் சொல்லுதடி
இதயத்தின் சுவர்களில் ரத்தத்தினால்
மனம் உன் பெயர் எழுதுதடி

தாமரையே நீ முகம் மலர்ந்தால்
எனக்குள் சூரியன் உதிக்குதடி
கோபம் கொண்டு நீ முகம் சுளித்தால்
நெஞ்சில் பூகம்பம் வெடிக்குதடி

வானமே வந்து வாழ்த்திடும்
தெய்வீக காதலடி
அந்த காதலே தன்னை வியந்திடும்
ஒரு காவியம் ஆகுமடி
*
(குறிப்பு:என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்து விட்டேன் என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: