புதன், 15 ஜூன், 2011

மெட்டுப்பாடல்கள்-11

நெஞ்சோடு கவலை இல்லை- எனக்கு
வஞ்சிக்கொடி நீ இருந்தால்
பஞ்சோடு நெருப்பாக - எரிவேன்
கொஞ்சி பேசும் நீ பிரிந்தால் - என்னை
கொஞ்சி பேசும் நீ பிரிந்தால்
*
தாரம் தருகிற கட்டில் அன்பும்
தாயே தருகிற தொட்டில் அன்பும்
பூக்கிறதே உன்னால் பூக்கிறதே

இதயம் பாடும் நெஞ்சின் ஆசை
உதயம் ஆகும் காதல் ஓசை
கேட்கிறதே உன்னால் கேட்கிறதே

நிலவு ஒளிரும் வானத்தில்
ஒளியாய் நாமும் மாறிடுவோம்
வாசம் வீசும் தோட்டத்தில்
மலராய் நாமும் மாறிடுவோம்
பறவை பாடும் கானத்தில்
இசையாய் நாமும் மாறிடுவோம்
*
விண்ணில் சொர்க்கம் நட்சத்திர வானம்
மண்ணில் சொர்க்கம் பெண்ணுடைய நாணம்
கண்டு கொண்டேன் உன்னால் கண்டு கொண்டேன்

பயிர்கள் அத்தனையும் மண்ணுக்குள்ளே அடக்கம்
உயிர்கள் அத்தனையும் பெண்ணுக்குள்ளே அடக்கம்
தந்து விட்டேன் என்னை தந்து விட்டேன்

பொங்கி ஆடும் கடலினிலே
அலையை போலே வாழ்ந்திடுவோம்
பசுமை நிறைந்த திடலினிலே
பனியை போலே வாழ்ந்திடுவோம்
இயற்கை எழுதும் மடலினிலே
கவிதை போலே வாழ்ந்திடுவோம்
*
(குறிப்பு:கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: