புதன், 15 ஜூன், 2011

மெட்டுப்பாடல்கள்-12

ஞாபகங்களே நெஞ்சை அள்ளுதே
உந்தன் நினைவு உயிரை கிள்ளுதே

கனவில் பாய் விரிக்கிறேன்
இதுவும் நானேதானா?
தனிமையில் தினம் சிரிக்கிறேன்
இதுவும் நானேதானா?
சில அதிசயங்கள் எனக்குள்ளே ஏன் நிகழ்ந்தது?
*
எந்தன் பெயர் என்னவென்று மறக்கின்றேனே- கண்ணே
இறக்கை ஒன்றும் இல்லாமல் நான் பறக்கின்றேனே
உன்னை கண்டால் மானை போல தாவுகின்றேனே-கண்ணே
உன் பெயரை நெஞ்சுக்குள்ளே கூவுகின்றேனே

பெண்ணாக பூமியில் வந்த தங்க நிலவோ
எந்நாளும் நானே தங்க வந்த நிழலோ
இரவோடு என்னை தீண்டும் இன்ப ஒளியோ
உறவோடு கொஞ்சி பேசும் காதல் கிளியோ
காதல் இதயத்தில் கங்கை வெள்ளங்கள் கலந்தோடுதே
*
உந்தன் மார்பில் மலரை போல பூத்திருக்கிறேன்-கண்ணே
உந்தன் தோளோடு தோள் சேர காத்திருக்கிறேன்
உந்தன் முகம் நாணும் போது பார்த்திருக்கிறேன்-கண்ணே
கனவில் அதை காணும் போது வேர்த்திருக்கிறேன்

கண்ணே நீ கொடியில் பூத்த வைர இலையோ
இல்லை கடலோடு தப்பி வந்த முத்து அலையோ
கண்ணே உன் செந்தேகம் தங்க உலையோ
கண்ணே அதில் நான் கொதிக்க என்ன விலையோ
காதல் கண்களில் மின்மினிப்பூச்சிகள் பறந்தோடுதே
*
(குறிப்பு:சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது என்ற பாடல் மெட்டு)






கருத்துகள் இல்லை: