வெள்ளி, 17 ஜூன், 2011

மழைக்கால படிமம்


நேற்றிரவு பெருமழையால் 
எங்கும் வெள்ளக்காடாய் 
வழிகிற பரப்புகளுக்கு
எதிர்பார்ப்புகள் பொய்த்த ஆழங்கள்.

கல்யாணத்திற்கான
பந்தக்குழி பள்ளம் 
செந்நீர் தேங்கிய
கடக்கால் பள்ளம்
முழுசும் நிரம்பிய
கிணற்று பள்ளம் 
யாவும் பாதகமில்லை.

முன்பொருநாள் முழங்காலளவு
தண்ணீரோடும் பெண்ணையாற்றில்
மணல் பள்ளத்தில் மூழ்கிப்போன 
சிறுவனின் மரணம் மனப்பள்ளத்தில்
மூழ்காமல் மிதக்கிறது!


கருத்துகள் இல்லை: