புதன், 15 ஜூன், 2011

மெட்டுப்பாடல்கள்-7

நட்சத்திர பூக்களெல்லாம் வானுக்கு சொந்தம் அன்றோ?
வாடாத பொன்மலரே நானுனக்கு சொந்தம் அன்றோ?

ஈரமுள்ள நெஞ்சில் எல்லாமே
காதல் இருக்கும்
காதலரின் கண்கள் சிந்திடும்
கண்ணீர் இனிக்கும்

நதியினை கடலது வெறுக்குமோ?
உயிரினை உடலது வெறுக்குமோ?
*
பூவுக்குள்ளே தேன் இருந்தால்
வண்டுக்கு சொந்தம் அன்றோ?
பூமிக்குள்ளே நீர் இருந்தால்
வேருக்கு சொந்தம் அன்றோ?
யாருக்கு யாருன்னு முடிச்ச யாரு போடுவது?
எங்கேன்னு எங்கேன்னு அவனை நானும் தேடுவது?

இது காதல் செய்து வைத்த விளையாட்டு
மறுக்காமல் ஏற்று கொண்டு தலையாட்டு
கண்ணோடு இமை ஊடல் கொண்டு
எந்நாளும் தள்ளி போவதில்லை

காதல் ஒருபோதும் இல்லாமல் போகாது
பூலோகம் எந்நாளும் பூப்பூத்திடும்
*
மழைத்துளிகள் பெய்யும் முன்னே
மேகத்தின் சொந்தம் அன்றோ?
மழைத்துளிகள் பெய்த பின்னே
மண்ணுக்கு சொந்தம் அன்றோ?
பொண்ணுங்க எல்லோரும் மழைத்துளிய போல தானுங்க
பொறந்த வீட விட்டுவிட்டு புகுந்தவீடு போக வேணுங்க

இது காதல் செய்து வைத்த விளையாட்டு
மறுக்காமல் ஏற்று கொண்டு தலையாட்டு
கண்ணோடு இமை ஊடல் கொண்டு
எந்நாளும் தள்ளி போவதில்லை

காதல் ஒருபோதும் இல்லாமல் போகாது
பூலோகம் எந்நாளும் பூப்பூத்திடும்
*
(குறிப்பு:சின்ன முள்ளு காதலி அல்லோ?பெரிய முள்ளு காதலன் அல்லோ? என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: