புதன், 15 ஜூன், 2011

மெட்டுப்பாடல்கள்-10

எங்கே எங்கே உன் வாசம்
அங்கே அங்கே என் சுவாசம்
நீ பக்கம் வந்தால் நான் போகி
நீ தள்ளி சென்றால் நான் யோகி
*
பூமுகம் பார்த்து பேசிட நினைத்தேன்
இருந்தும்  இமைகள் இறங்குதடி
சுமைகளை தாங்கும் கொடியினை கண்டேன்
இதயம் வருந்தி கலங்குதடி

பார்த்தால் போதும் ஆனந்தம் கொடுக்கும்
சுந்தரி உந்தன் இளமையடி
மார்கழி மாதம் வானத்தில் வசிக்கும்
ராத்திரி நிலவின் குளுமையடி

தென்றல் உனது வார்த்தைகள் கேட்டே
பூமி முழுவதும் வீசுமடி
வீசும் தென்றல் காற்றில் எங்கும்
பொன்மகள் உந்தன் வாசமடி
*
பாற்கடல் அதனை கடைந்து எடுத்து
தேவர்கள் படைத்திட்ட அதரமடி
மலரே உந்தன் அதரத்தின் ஓரம்
அமுதின் துளிகள் சிந்துமடி

சிறகுகள் முளைத்து வானத்தில் பறக்கும்
இந்திரா லோகத்து தேவியடி
தேவியின் பார்வை தீண்டும் போது
மோச்சத்தை அடையும் ஆவியடி

உயிராய் வந்து தரையினில் நடக்கும்
பாரதி தாசனின் கவிதையடி
ராக தேவன் இளைய ராஜா
சிம்பொனி உந்தன் வார்த்தையடி
*
(குறிப்பு:அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: