செவ்வாய், 13 செப்டம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-30

தாமரையே தாமரையே
தந்தேன் இந்த சூரியனை
தலைசாய்த்து மெளனம் காக்காதே
ஒரு தேவதை போல் நீயே வியக்கும் வண்ணம்
உன்னை தினந்தோறும் அலங்கரிப்பேன்
*
உனை நானாக எனை நீயாக
அடி எந்நெஞ்சம் எப்போதும் நினைக்கிறது
தள்ளி ஓடாதே தடை போடாதே
ஒரு பொன்மஞ்சம் இப்போது அழைக்கிறது

இரவோடு இரவாக நிலவுக்கு ஏறி செல்வோம்
காதோடு காதாக நிலவுக்கு நம்கதை சொல்வோம்
நாம் உலகம் எங்கும் ஊர்வலம் போவோம்
ஆகாய மேகத்தில்...
*
உயிர் நீதானே உடல் நான்தானே
உடல் மேல் உயிர்வந்து ஒன்றாதோ
மெல்ல தீண்டிவிடு என்னை தூண்டிவிடு
தூண்டாத தீபம் சுடர் விடுமோ?

இரவோடு இரவாக நிலவுக்கு ஏறி செல்வோம்
காதோடு காதாக நிலவுக்கு நம்கதை சொல்வோம்
நாம் உலகம் எங்கும் ஊர்வலம் போவோம்
ஆகாய மேகத்தில்...
*
(குறிப்பு:வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா?விளையாட ஜோடி தேவை என்ற பாடல் மெட்டு)

2 கருத்துகள்:

காந்தி பனங்கூர் சொன்னது…

அருமையான வரிகள். கலக்குங்க. வாழ்த்துக்கள்.

Karthikeyan Rajendran சொன்னது…

மெட்டை மட்டும் சுட்ட மேதாவியே வாழ்க உம் பணி