வெள்ளி, 2 செப்டம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-24

கண்மணியே கண்ணுபடும்
ஒரு திருஷ்டிப் பொட்டு வேணுமடி
பிரம்மனுக்கே ஆச்சரியம்
தன் சிருஷ்டி கண்டு தோணுமடி

யாரும் காணாத உருவாய்
எந்தன் கண்ணோடு வருவாய்-அடி
உன்னோட திருவாய்
தப்பாமல் தருவாய்
*
ஊரு கண்ணு பூரா
உம்மேலையும் எம்மேலையும்
காதுபட என்னென்னவோ
முன்னாலையும் பின்னாலையும்

ஐயய்யோ அடுக்காது
அவனுக்கே பொறுக்காது
அவுக பேச்செல்லாம்
இனிமே எடுக்காது

தங்கத்துல செஞ்சிபுட்டேன் தாலி
தங்கமே யாரு செய்வா கேலி-அடி
உன்னை சுத்தி இன்னும் கூட
ஏண்டியம்மா வேலி
*
காதுல முத்தங் கொடுத்து
உசிரையே கரைச்சவளே
தலையில மிளகாய
சொல்லாமலே அரைச்சவளே

உன்னோட குறும்பெல்லாம்
எந்நாளும் மறக்காது
என்னோட இதய சன்னல்
யாருக்கும் திறக்காது

அசையும் பச்சைவயல் நாத்து
அதைத்தான் தழுவும் தென்றல் காத்து-அடி
நீயோ நாத்து நானோ காத்து
போதும் கதவ சாத்து!
*
(குறிப்பு:ராசாவே உன்னை நம்பி ஒரு ரோசாப்பூ இருக்குதுங்க என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: