செவ்வாய், 13 செப்டம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-28

கார்மேகம் சூழும் வரை
மயில் ஆடிடத்தான் நினைக்கும்
என் தேகம் வாழும் வரை
மனம் பாடிடத்தான் நினைக்கும்
*
ஒரு மூங்கிலின் பாடல்தான்
இந்த தென்றலின் தாலாட்டோ?
ஒரு பூமியின் பாடல்தான்
அந்த திங்களின் சீராட்டோ?
ஒரு காதலின் பாடல்தான்
எந்த உயிருக்கும் பாராட்டோ?
*
ஒரு புல்லின் பாடலுக்கு
இந்த பனித்துளி பரிசு தரும்
ஒரு பூவின் பாடலுக்கு
அந்த தேன்துளி பரிசு தரும்
ஒரு வாழ்வின் பாடலுக்கு
எந்த தேடலும் பரிசு தரும்
*
(குறிப்பு:ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: