வெள்ளி, 2 செப்டம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-23

நீண்ட கூந்தலிலே
நிலவ கட்டிவச்ச பூங்குயிலே
நித்தம் உன் நினைப்ப நெஞ்சுக்குள்ளே
பொத்தி பொத்தி வாரேன் பெண்ணே
உன்னை குட்டி போட்ட பூனை போல
சுத்தி சுத்தி வாரேன் கண்ணே

இமையோரம் நதி ஓட
இதயம் ஒரு ஜதி பாட
ஐயய்யோ எனக்கென்ன ஆனது?ஏனிது நேர்ந்தது?
காதலோ?
உன்னை காணாம இருந்திருந்தா
ஒண்ணும் ஆகாம இருந்திருக்கும்
இனி நீ சொல்லியோ நான் சொல்லியோ
அதை கேட்க போவதில்லை இந்த பாவி நெஞ்சம்!
*
மாமன விட்டு தள்ளி போறவளே
மஞ்சம் அதில் எனக்கு இடமில்லையோ?
கூரப்பட்டு உடுத்தி போறவளே
குஞ்சம் அதில் எந்தன் உசிரில்லையோ?
சேலைக்குள்ள சோலைகளை
ஒளிச்சு வச்ச உயிர்ச்சிலையே
ஒரு விதையை மறைக்கிற மண்ணுந்தான்
முளைக்கையில் அதனிடம் தோற்குமே!
*
இதயமதை என்னிடம் கொடுத்து விட்டு
என்னை நீயும் வாங்கிக்கொள்ளடியே
இளமையது தீர்ந்து போவதற்குள்
இருக்கும் வரை வாழ்ந்துகொள்ளடியே
காதலெனும் செய்யுளிலே
இலக்கணங்கள் ஏதுமில்லை
இளமனச முறுக்கியே பிழியுது
சிறுக்கியின் சின்ன இடை வேர்வதான்!
*
(குறிப்பு:குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: