செவ்வாய், 13 செப்டம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-29

அத்து மீறுதேஅன்பே...
ஆசை அலை அத்து மீறுதே...
ஆயிரமாயிரம் உணர்வுகள் கிளர்ந்து
அத்து மீறுதே...அன்பே...
ஆசை அலை அத்து மீறுதே...

சிறை வசமான
பிறை நிலா ஒன்று
மேகம் உடைத்து வெளியிலே-இந்த
பூமியை பார்த்த நொடியிலே...
*
கதிரவன் ஒளியை நட்ட நடுநிசியில் உணர்கிறேன்
காற்றை புணரும் ஒரு மெளனம் உணர்கிறேன்
சில்வண்டு ரீங்கரிப்பில் மெல்லிசை உணர்கிறேன்
சொல்லில் சொல்லவொண்ணா-
இன்பத் தொல்லை உணர்கிறேன்!

என்னை காண்கிற சந்தர்ப்பம் நேர்ந்தால்
கண்களை தாழ்த்தி கடந்து போ-அடி
உந்தன் கொலுசு பாதங்களினால்
இதயம் நசுக்கி நடந்து போ
மங்கும் விழிகளில் மலரும் முகங்களில்
என்முகம் எதுவென மறந்து போ
*
முற்றும் போட்ட பின்பும்
கதை தொடருதே
முள்ளென்று தெரிந்தும்
கொடி படருதே
என் செய்வேன்
என் செய்வேன்?
என் இறைவா...

கொடுவாள் கொண்டு வெட்ட
பீறிடும் இளநீர் போலவே
உனது ஞாபகங்களினாலே...
*
(குறிப்பு:அலை பாயுதே...கண்ணா... என் மனம் அலைபாயுதே என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: