செவ்வாய், 13 செப்டம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-27

மலரே மலரே உன் வாசம்
மேகக் குழலாள் தூதுவிட
மறந்தாள் போலும் மங்கையவள்
எனக்கன்று ஜலதோஷம்
*
நான் பனிவிழும் இரவுகள் யாவிலும்
அவளை எண்ணியே விழித்திருந்தேன்
தேன் சிந்திடும் பூமர நிழலிலும்
உறக்கம் இன்றியே படுத்திருந்தேன்

கனா காண ஏங்கினேன்
கண்ணோடு இமை சேருமா?
கானல் தானே வாங்கினேன்
என்னோடு சுமை தீருமா?
கண்ணன் இங்கே ராதை எங்கே?
*
என் தேவதை தண்ணீர் கேட்டால்
பூவின் மொட்டுகள் உடைத்திடுவேன்
ஓர் பார்வையை பதிலாய் தந்தால்
நூறு கவிதைகள் படைத்திடுவேன்

வரையறை இல்லையே
என் அன்பை நான் சொல்லவே
தலையணை வெள்ளமே
என்னோடு அவள் இல்லையே
கண்ணன் இங்கே ராதை எங்கே?
*
(குறிப்பு:மனசே மனசே குழப்பமென்ன இதுதான் வயசே காதலிக்க என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: