புதன், 18 மே, 2011

"ம"வரிசைப்பாட்டு



மடமட என்று கிளம்புவாரு
மாடி வீட்டு காவலரு
மிடுக்காய் சீருடை அணிவாரு
மீசையை முறுக்கி நடப்பாரு
முட்டிக்கு முட்டி தட்டுவாரு
மூக்கு மேலேயே குத்துவாரு
மெல்லமெல்ல பதுங்கி போய்
மேலே பாய்ந்து பிடிப்பாரு
மைதிலி வீட்டில் ஒரு தடவை
மொட்டை தலையன் திருடி சென்ற
மோதிரம் செயினை மீட்டாரு
மௌனமாய் திருட்டுகள் செய்தவனை
கம்பிகள் எண்ண வைத்தாரு!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நன்றாக உள்ளது .வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

சீனுவாசன்.கு சொன்னது…

தாலாட்டு அருமை!