வியாழன், 19 மே, 2011

தமிழ்த்தாய் வாழ்த்து!

என்னே அழகு
செம்மொழி!
என்னை-
எழுதவைத்தது
அம்மொழி!

தாயார் எனக்கு
தந்த மொழி!
என்னை-
தாலாட்டி வளர்த்த
சந்த மொழி!


எத்திக்கும் எத்திக்கும்
எமது மொழி!
அது-
தித்திக்கும் தித்திக்கும்
அமுது மொழி!


எழுதி பழக
எளிமை மொழி!
தமிழ்-
என்றும் இளமை
புதுமை மொழி!

கருத்துகள் இல்லை: