திங்கள், 1 ஏப்ரல், 2013

பகுத்தறிதல்


நம்திறமை நாமறிந்தால்
நினைத்தவாறு வெற்றி கிட்டும்!
திறமையை வெளிப்படுத்த
குறிக்கோள் வேண்டுமன்றோ?
நாம் குறிக்கோளை அடைவதற்கு
சரியான அணுகு முறையை
தேர்ந்து எடுக்க வேண்டும்!

அண்டப்புளுகு புளுகுவோரை
அப்படியே நம்பலாமா?
ஏன்? எப்படி?எதற்கு?என்று
கேள்விகள் கேட்டிட வேண்டாமா?
நாம் தென்னையிலே தேள்கொட்ட
பனையிலா நெறி கட்டும்?
பகுத்தறிந்து பார்க்க வேண்டும்! 

இயற்கையின் மேல் குறையில்லை!
இயைந்து வாழ்ந்தால் குற்றமில்லை!
வற்றும் வளங்கள் தீர்ந்தால்
வருங் காலம் என்னாவது?
நாம் இக்கட்டான சூழ்நிலையை
எதிர் கொள்ளும் நடவடிக்கை
இப்போதே எடுக்க வேண்டும்!

உண்ணும் உணவே மருந்தாகும்!
உணர்ந்தாலே உடல் நலமாகும்!
உணவு பழக்கத்திலே
கட்டுப்பாடு வேண்டாமா?
நாம் சைவம் என்றாலும்
அசைவம் என்றாலும்
அளவாக உண்ண வேண்டும்!

முட்டாள் சொல்வான் முடியாது!
முயற்சிக்காமல் விடிவேது?
தொடர்ந்து முயற்சிப்பதை
தோல்வி என்றா சொல்லுவது?
நாம் மந்திரத்தில் மாங்காய்கள்
ஒருபோதும் விழாதென்று
உணர்ந்து உழைக்க வேண்டும்!

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விழிப்பூட்டும் வரிகள்... பாராட்டுக்கள்...

பூந்தளிர் சொன்னது…

முட்டாள் சொல்வான் முடியாது!
முயற்சிக்காமல் விடிவேது?
தொடர்ந்து முயற்சிப்பதை
தோல்வி என்றா சொல்லுவது?
நாம் மந்திரத்தில் மாங்காய்கள்
ஒருபோதும் விழாதென்று
உணர்ந்து உழைக்க வேண்டும்!

ஆமாங்க மிகவும் உண்மைதான்.பகிர்வுக்கு நன்றி