செவ்வாய், 20 நவம்பர், 2012

உஜ்ஜயி ப்ராணாயாமம்


பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமரவும்.
கைகளில் ஞான முத்திரை இருக்கட்டும்.
மூலபந்தம்.ஒட்டியான பந்தம் செய்யும் போது சுவாசத்தை நேரடியாக மூக்கினால் இழுக்காமல் நாம் ஆச்சரியப்படும் போது தொண்டை சதைகளை சுருக்கி ஏற்படுத்தும் ஒலியோடு சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
பின்னர் மூச்சை உள்ளிருத்தியவாறு ஜாலந்தர பந்தம் செய்யவும்.
மேற்கூறிய நிலையில் முடிந்த வரை இருந்து ஜாலந்தர பந்தம் மட்டும் விடுவித்து வலது நாசியை மூடி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியேற்றும் போது மற்ற இரண்டு பந்தங்களையும் மெதுவாக விடுவிக்கவும்.
மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.
பலன்கள்:
தொண்டை வியாதிகள்,தைராய்டு சரி செய்யப்படும்.
குரல் வளம் பெருகும்.
செய்ய கூடாதவர்கள்:
கர்ப்பிணி தாய்மார்கள்,பெண்கள் மாதவிலக்கு நேரங்களிலும்,இதய நோய் உள்ளவர்களும் செய்ய கூடாது.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இரண்டிற்கும் உள்ள (முந்தைய பகிர்வுக்கும்) வித்தியாசம் அறிந்தேன்... நன்றி...