செவ்வாய், 20 நவம்பர், 2012

ப்ராமரீ ப்ராணாயாமம்


பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமரவும்.
நுரையீரல் நிரம்பும் வரை காற்றை உள்நோக்கி சுவாசிக்கவும்.
இரு காதுகளையும் இரு கைகளின் கட்டை விரல்களால் மூடவும்.
நடுவிரல் மற்றும் மோதிர விரல்களால் இரு கண்களையும் மூடவும்.ஆட்காட்டி விரல்களால் முன்னெற்றியை மெதுவாக அழுத்தவும்.
இரு புருவங்களுக்கு இடையில் மனதை நிறுத்தவும்.
“ம்என்ற ரீங்கார ஓசையுடன் மனதில் ஓம் என்று நினைத்தபடி காற்றை வெளியிடவும்.
மூன்று முதல் இருபத்தியோரு முறை செய்யவும்.
பலன்கள்:
மனம் ஒரு நிலைப்படும்.
மன அழுத்தம் குறையும்.
உயர் இரத்த அழுத்தம்,இதய நோய்கள் சரி செய்ய உதவியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: