செவ்வாய், 20 நவம்பர், 2012

அனுலோம-விலோம ப்ராணாயாமம்


பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமரவும்.
கைகளில் வாயு முத்திரை இருக்கட்டும்.
வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடியவாறு இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
பின்பு இடது நாசியை வலது கை மோதிர விரலால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சை வெளியிட வேண்டும்.
மூச்சை வெளியிட்ட வலது நாசி வழியாக மீண்டும் மூச்சை உள்ளிழுத்து வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக வெளியிட வேண்டும்.
ஐந்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
சோர்வு ஏற்படும் தருணத்தில் இடையே சிறிது ஓய்வு எடுத்து கொள்ளலாம்.
பலன்கள்:
இப்பயிற்சியால் உடலின் கணக்கற்ற நாடிகள் தூய்மை அடைவதால் உடலானது ஆரோக்கியம்,பொலிவு மற்றும் வலிமை பெறுகிறது.
மூலாதாரம் எழுப்பப்படுகிறது.
சிறுநீரக வியாதிகள் குணமடையும்.