செவ்வாய், 20 நவம்பர், 2012

பாக்ய ப்ராணாயாமம்


ஆசன வாயை சுருக்கி உள்ளிழுத்து அடக்கி வைப்பது ‘மூலபந்தம்ஆகும்.
நெஞ்சு பகுதியை விரித்து வயிற்று பகுதியை நன்றாக உள்ளிழுத்து அடக்கி வைப்பது ஒட்டியான பந்தம்ஆகும்.
உங்கள் தாடையை உங்கள் தொண்டை குழியை தொடுமாறு முன்னோக்கி குனிந்து கொள்வது ஜாலந்தர பந்தமாகும்.
பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமரவும்.
கைகளில் ஞானமுத்திரை இருக்கட்டும்.
இயன்ற அளவு சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றவும்.
மூலபந்தம்,ஒட்டியான பந்தம் மற்றும் ஜாலந்தர பந்தம் செய்யும் போது சுவாசத்தை வெளியேற்றவும்.
மேற்கூறிய நிலையில் முடிந்தவரை இருந்து பின் சுவாசிக்க விரும்பும் போது மூன்று பந்தங்களையும் மெதுவாக விடுவிக்கவும்.
மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.
பலன்கள்:
செவிட்டுத்தன்மை,ஊமை,மலச்சிக்கல் சரி செய்யப்படும்.குண்டலினி சக்தி விழிப்படையும்.குடல் புழுக்கள் அழியும்.
செய்ய கூடாதவர்கள்:
கர்ப்பிணி தாய்மார்கள்,பெண்கள் மாதவிலக்கு நேரங்களிலும்,இதய நோய் உள்ளவர்களும் செய்ய கூடாது.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கத்திற்கு நன்றி...