வியாழன், 31 மே, 2012

குறுஞ்செய்திகள்-251


என்னவளே
மதுவும் மாதுவும்தான்
மனிதனைக் கெடுக்கும்
போதை என்று சொன்னேன்

அடடா
அவைகளை விடவும்
கொடுமையான போதை
புகழ் போதை! என்கிறாய்

குறுஞ்செய்திகள்-250


என்னவளே
முன்பெல்லாம் அமைதிதேடி
நகர நரகத்திலிருந்து தப்பித்து
கிராமம் நோக்கி செல்வேன்!

அடடா
இப்போது என்கிராமமும்
தன்முகம் தொலைத்துவிட்டு
நரகமாக அல்லவா மாறிவருகிறது! 

குறுஞ்செய்திகள்-249


என்னவளே
நீ நினைத்ததைப்போல
நான் இல்லாத ஏக்கத்தை
எப்படித்தான் தாங்குகிறாயோ?

அடடா
மீண்டும் நிகழமுடியா
இறந்தகாலம் வெளிப்படுகிறது
நீண்ட உன் பெருமூச்சினில்!

சனி, 26 மே, 2012

குறுஞ்செய்திகள்-248


என்னவளே
ஊர் போய் திரும்புகையில்
சொர்கத்தை பார்த்த மாதிரி
ஆனந்தம் ஏன்? என்கிறாய்

அடடா
தொடக்கக்கல்வி பயின்ற
பள்ளிக்கூடத்தை விட
சொர்க்கம் இருக்கிறதா என்ன?

வியாழன், 24 மே, 2012

குறுஞ்செய்திகள்-247


என்னவளே
பெருமழைக்காலம் தவிர்த்து
பெரும்பாலும் நீரில்லாமல்
வற்றியே கிடக்கிறது ஆறு!

அடடா
ஆற்றுத்திருவிழாவின் போது
அணையைத் திறந்தால்
அதுவே போதும் நமக்கு!