சனி, 25 ஜூலை, 2020

குறை ஒன்றும் இல்லை... மறைமூர்த்திக் கண்ணா...

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நிறை அனைத்தும் தருகிறாய் இறைவா

நிறை அனைத்தும் தருவாய் பேரிறைவா

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நிறை அனைத்தும் தருகிறாய் இறைவா

நிறை அனைத்தும் தருவாய் பேரிறைவா

நீக்கமற எங்கெங்கும் நிறைகிறாய் இறைவா

ஆக்கமுறு என்செயல்கள் யாவிலும் துணைநின்று

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நாடுவது வேண்டுமென்றால் நாடுவதே தீர்வு அன்றோ

என்னுடைய நாட்டம் எல்லாம் நீதானே இறைவா

பேரண்டம் பேராற்றல் பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா

 

அங்கிங்கெனாதபடி எங்கெங்குமே இருக்கிறாய்

இறைவா அங்கிங்கெனாதபடி எங்கெங்குமே இருக்கிறாய் –உன்னை

மெய்ஞானம் தேடுவோர் யாவரும் அடைவார்

அங்கிங்கெனாதபடி எங்கெங்குமே இருக்கிறாய் –உன்னை

மெய்ஞானம் தேடுவோர் யாவரும் அடைவார்

உனக்காக எதை நான் தருவேன் இறைவா

உனக்காக எதை நான் தருவேன் இறைவா

வேண்டுவதை வேண்டுவோர்க்கு தருகின்றாய் வரமாய்

வேண்டுவதை வேண்டுவோர்க்கு தருகின்றாய் வரமாய்

நிறைஅனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

பேரண்டம் பேராற்றல் பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா

 

வானாக இருப்பதறிய செவியினைப் படைத்து

வளியாக இருப்பதறிய மெய்யினைப் படைத்தாய் இறைவா

நீராக இருப்பதறிய நாக்கினைப் படைத்து

நிலமாக இருப்பதறிய மூக்கினைப் படைத்தாய் இறைவா

கனலாக இருப்பதறிய கண்களைப் படைத்தாய்

யாதும் நீயாகிய பேரிறைவா

யாதும் நீயாகிய பேரிறைவா-எதை நானறிய

ஆறாம் அறிவாகிய மனதைப் படைத்து வைத்தாய்?

மனதை அடக்க ஏது வழி எனக்கு?

மனதை அடக்க ஏது வழி எனக்கு?

அனைத்தும் நிறைவாக தந்தாய் இறைவா

அனைத்தும் நிறைவாக தந்தாய் இறைவா

பேரண்டம் பேராற்றல் பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா

பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா...

 -கு.சீனுவாசன்

வாழ்த்துக் கவிதை

ஓம் என்ற வானின் ஒலியை 
உம் செவிகள் கேட்டு இன்புறட்டும்!

வெளிச்சமான கதிரவன் ஒளியை
உம் கண்கள் பார்த்து களிப்புறட்டும்!

தூய்மையான தென்றல் காற்று
உம் மெய்யில் நுழைந்து வருடட்டும்!

சுவையான தீஞ்சுவைக் குடிநீர்
உம் நாவில் தாகம் தீர்க்கட்டும்!

பூத்துக் குலுங்கும் சோலைநிலம்
உம் மூக்கில் வாசம் சேர்க்கட்டும்!

பேரண்டம் பேராற்றல் பேரன்பு
உம் வாழ்வின் ஆயுளைக் கூட்டட்டும்!

அன்புடன்,

கு.சீனுவாசன்...