சனி, 25 ஜூலை, 2020

வாழ்த்துக் கவிதை

ஓம் என்ற வானின் ஒலியை 
உம் செவிகள் கேட்டு இன்புறட்டும்!

வெளிச்சமான கதிரவன் ஒளியை
உம் கண்கள் பார்த்து களிப்புறட்டும்!

தூய்மையான தென்றல் காற்று
உம் மெய்யில் நுழைந்து வருடட்டும்!

சுவையான தீஞ்சுவைக் குடிநீர்
உம் நாவில் தாகம் தீர்க்கட்டும்!

பூத்துக் குலுங்கும் சோலைநிலம்
உம் மூக்கில் வாசம் சேர்க்கட்டும்!

பேரண்டம் பேராற்றல் பேரன்பு
உம் வாழ்வின் ஆயுளைக் கூட்டட்டும்!

அன்புடன்,

கு.சீனுவாசன்...

கருத்துகள் இல்லை: