புதன், 25 மே, 2011

மெட்டுப்பாடல்கள்-3

அழகே பேரழகே
உன் அழகு போல் இல்லை வேறழகே!

கண்ணுக்குள்ளே கனவாய் பூத்திடு
கண்கள் கூட விலையாய் கேட்டிடு!

பேரழகே என் பேரழகே
பேரழகே என் பேரழகே
*
வாழ்க்கை இன்று உன்னிடம் அழகே
வார்த்தை ஒன்று சொல்லிடு அழகே
மெல்லிய பூங்காற்று
உன் பேர் சொல்லி ஆனது தாலாட்டு!
நானும் பேர் சொல்ல வரம் தந்திடு
வாழ்வை நான் வெல்ல கரம் தந்திடு!
*
காதல் தந்திடும் காயம் அழகே
காயம் தந்திடும் கண்ணீர் அழகே
நினைவில் நீ இருந்தால்
நெஞ்சோடு ஆயிரம் நீரூற்று!
நாணல் நானாக நதியாகிடு 
கானல் ஆகாமல் எனை சேர்ந்திடு!
*
(குறிப்பு:கண்ணே கலை மானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே என்ற பாடல் மெட்டு) 

கருத்துகள் இல்லை: