ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பஸ்திரிகா ப்ராணாயாமம்


  • வசதியான ஆசனத்தில் உட்காரவும்.இரண்டு நாசிகள் வழியாக பலமாக நுரையீரல் நிரம்பும் வரை சுவாசிக்கவும்.கைகளில் ஞானமுத்திரை இருக்கட்டும்.
  • வயிற்றுப்பகுதி வீங்கா வண்ணம் சுவாசிக்க வேண்டும்.
  • 2 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை செய்யலாம்.
  • சுவாசம் செய்யும் போது ‘ஓம்என்ற மந்திரத்தை நினைக்கவும்.
  • சோர்வு அடையும் வரை இரண்டு நாசிகள் வழியாக காற்றை உள்ளே இழுத்து வெளிவிட வேண்டும்.






பலன்கள்:
  • அனைத்து வகை சுவாச நோய்களான சளி,இருமல்,ஒவ்வாமை சரி செய்யப்படுகின்றன.
  • இதயம்,நுரையீரல்,மூளைக்கு அதிக ப்ராணன் கிடைப்பதால் அவைகள் திடமாகி நோய் எதிர்ப்பு திறனை பெறுகின்றன.
  • தொண்டை சம்மந்தப்பட்ட தைராய்டு,டான்சில் நோய்கள் குணமடைகின்றன.
  • வாதம்,பித்தம்,கபம் இவைகள் சமன் செய்யப்படுகின்றன.
  • மனதை அமைதிப்படுத்தி மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை எழுப்ப உதவுகிறது.






செய்யக்கூடாதவர்கள்:
  • உயர் இரத்த அழுத்தம்,இதய நோய் இருப்பவர்கள் செய்யக்கூடாது.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆரம்பத்தில் சிறிது சிரமம் இருந்தாலும் தினமும் தொடர்ந்தால் பழகி விடும்...

மிகவும் பயனுள்ள தகவல்...

நன்றி சார்..